- வீடு›
- செய்திகள்›
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல்
By: vaithegi Thu, 21 July 2022 09:48:06 AM
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாகவே சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை அடுத்து கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஓபிஎஸ் கவச உடை அணிந்து வாக்களித்தார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags :
hospital |