Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 18ம் தேதி எழும்பூரில் ஓ.பன்னீர்செல்வம் இப்தார் விருந்து அளிக்கவுள்ளதாக தெரிவிப்பு

வருகிற 18ம் தேதி எழும்பூரில் ஓ.பன்னீர்செல்வம் இப்தார் விருந்து அளிக்கவுள்ளதாக தெரிவிப்பு

By: vaithegi Thu, 13 Apr 2023 3:04:20 PM

வருகிற 18ம் தேதி எழும்பூரில் ஓ.பன்னீர்செல்வம் இப்தார் விருந்து அளிக்கவுள்ளதாக தெரிவிப்பு

சென்னை: வருகிற 18ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் இப்தார் விருந்து அளிக்கவுள்ளதாக தகவல் .... ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது

“இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளுள் ஒன்றான நோன்பிருத்தல் கடைபிடிக்கப்படும் புனித மாதமான ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

iftar dinner,o. panneerselvam ,இப்தார் விருந்து,ஓ.பன்னீர்செல்வம்

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வரும் 18-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணி அளவில் சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் இப்தார் விருந்து அளிக்கவுள்ளார்.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :