Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவர் கைது என தகவல்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவர் கைது என தகவல்

By: Nagaraj Tue, 27 Sept 2022 12:50:03 PM

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவர் கைது என தகவல்

கோவை: கைது குறித்து தகவல்... பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடையதாக ஏற்கெனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

police,investigation,criminals,court police,bombing ,காவல்துறை, புலன் விசாரணை, குற்றவாளிகள், நீதிமன்ற காவல், குண்டு வீச்சு

இது தொடர்பாக பேசிய கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தற்போது சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பிஎஃப்ஐ துடியலூர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளார். மேலும் இவருடன் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்று புலன் விசாரணை மேற்கொள்ளப்படும். தலைமறைவாக உள்ளவர்களை காவல் துறை தேடி வருகிறது எனக் குறிப்பிட்டார்.

Tags :
|