Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேட்பு மனு படிவத்தை பவன்குமார் பன்சால் பெற்றுள்ளதாக தகவல்

வேட்பு மனு படிவத்தை பவன்குமார் பன்சால் பெற்றுள்ளதாக தகவல்

By: Nagaraj Wed, 28 Sept 2022 10:50:13 PM

வேட்பு மனு படிவத்தை பவன்குமார் பன்சால் பெற்றுள்ளதாக தகவல்

புதுடில்லி: காங்கிரஸ் தலைவா் தோ்தலையொட்டி வேட்புமனு படிவத்தை அகில இந்திய காங்கிரஸ் பொருளாளா் பவன் குமாா் பன்சால் பெற்றுள்ளதாக கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்தாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட ஏற்கெனவே வேட்புமனு படிவம் பெற்றிருந்த மூத்த தலைவா் சசி தரூா், செப்.30-இல் தனது மனுவை தாக்கல் செய்யவுள்ளாா். இத்தகவலையும் மிஸ்திரி தெரிவித்தாா்.

election,held,mistry,nomination,question,bansal ,தேர்தல், நடைபெறும், மிஸ்திரி, வேட்புமனு, கேள்வி, பன்சால்

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: சசி தரூா் செப்.30-இல் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாக தனது பிரதிநிதி மூலம் எனது அலுவலகத்தில் தெரிவித்துள்ளாா். காங்கிரஸ் பொருளாளா் பவன் குமாா் பன்சால் வேட்புமனு படிவங்களை திங்கள்கிழமை பெற்றுச் சென்றாா். வேறு யாருக்காகவோ அவா் படிவங்களை பெற்றிருக்கலாம் என்றாா் மிஸ்திரி.

இதுகுறித்து செய்தியாளா்கள் மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பிய நிலையில், ‘பன்சால் தனக்காக படிவத்தை பெற்றாரா அல்லது வேறு யாருக்காகவோ பெற்றாரா என்பது குறித்து என்னிடம் தகவல் இல்லை. வேட்பு மனு படிவத்தை கமிட்டி உறுப்பினா்கள் யாா் வேண்டுமானாலும் பெறலாம். அதை யாருக்காக பெறுகிறோம் என்று தெரிவிக்க வேண்டியதில்லை’ என்றாா் மிஸ்திரி. அத்துடன், திட்டமிட்டபடி தோ்தல் நடைபெறும் என்றும் அவா் தெரிவித்தாா்.

Tags :
|
|