இம்ரான்கானை கைது செய்ய ராணுவம் களம் இறங்கியதாக தகவல்
By: Nagaraj Wed, 15 Mar 2023 11:59:45 PM
இஸ்லாமாபாத்: ராணுவம் களமிறங்கியது... இம்ரான் கானை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறிய போது ராணுவம் களமிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானை ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்ரான்கானை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவரது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.
சுமார் 20 மணி நேரமாக போலீஸாருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் இம்ரான் கானை போலீசார் நெருங்க முடியாத நிலையில் ராணுவம் குவிக்கப்பட்டு அவரை கைது செய்ய ராணுவ வீரர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.
ராணுவம் களம் இறங்கினால் தொண்டர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள் என கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.