Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளுக்கு அக் 25ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசித்து வருவதாக தெரிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளுக்கு அக் 25ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசித்து வருவதாக தெரிவிப்பு

By: vaithegi Sat, 22 Oct 2022 8:30:48 PM

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  பள்ளிகளுக்கு அக் 25ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசித்து வருவதாக தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறந்த பிறகு கனமழை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இடையில் விடுமுறை அளிக்கப்பட்டது. எதிர்பாராத இந்த விடுமுறைகளுக்கு பதிலாக வேறு நாளில் பள்ளிகள் செயல்படும்.

இதனை அடுத்து இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். தமிழகத்தில் பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

minister of school education,on leave ,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,விடுமுறை

மேலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை பள்ளிகளுக்கு வழக்கம் போல் விடுமுறை, திங்கட்கிழமை தீபாவளி அன்று அரசு விடுமுறை, இதை தவிர சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் பண்டிகை முடிந்து அடுத்த நாள் தான் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்புவார்கள்.

இதனால் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதி அன்றும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு அக் 25ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என கூறியுள்ளார்.

Tags :