Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழத்தில் நாளை முதல் வருகிற 19ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

தமிழத்தில் நாளை முதல் வருகிற 19ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

By: vaithegi Fri, 14 July 2023 11:09:50 AM

தமிழத்தில் நாளை முதல் வருகிற 19ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

சென்னை: வருகிற 19ஆம் தேதி வரை மழை ... மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

rainy,tamil nadu,puducherry and karaikal ,மழை ,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்

இதனை அடுத்து நாளை முதல் வருகிற 19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|