Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு வருடம் ஆகலாம் - அந்தோனி பாசி

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு வருடம் ஆகலாம் - அந்தோனி பாசி

By: Karunakaran Sun, 13 Sept 2020 2:44:41 PM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு வருடம் ஆகலாம் - அந்தோனி பாசி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. அங்கு இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் 66.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் புதிதாக 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டு பிடிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார். இதனால் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

corona damage,united states,anthony fausi,trump ,கொரோனா சேதம், அமெரிக்கா, அந்தோனி பாசி, டிரம்ப்

இருப்பினும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையிலே உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசின் மூத்த மருத்துவ நிபுணரான அந்தோனி பாசி கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னர் நாம் இருந்த இயல்பு நிலைக்கு திரும்புவதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது 2021-ம் ஆண்டுக்குள் இருக்கும். அல்லது 2021-ம் ஆண்டின் இறுதியில் கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், என்னை அரசு நிர்வாகம் அமைதியாக இருக்கும்படி கூறும் தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்தார். உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தற்போது ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :