Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐகோர்ட் கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்; முன்னாள் அமைச்சர் கருத்து

ஐகோர்ட் கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்; முன்னாள் அமைச்சர் கருத்து

By: Nagaraj Wed, 17 Aug 2022 4:59:05 PM

ஐகோர்ட் கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்; முன்னாள் அமைச்சர் கருத்து

சென்னை: ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பு அவரது ஆதரவாளர்களையும், அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

action,to be accepted,legal experts,advice,ex-minister ,நடவடிக்கை, ஏற்று கொள்ள வேண்டும், சட்ட நிபுணர்கள், ஆலோசனை, முன்னாள் அமைச்சர்

ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஐகோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்பு கிடைத்துள்ளது. சட்டரீதியாக இதனை எதிர் கொள்வோம். பொதுக்குழுதான் சர்வ அதிகாரம் படைத்தது. ஐகோர்ட் பிறப்பித்தள்ள உத்தரவில் ஆணையர் ஒரு வரை நியமித்து பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஐகோர்ட் கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதுபற்றி அதிகம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீர்ப்பு விவரங்கள் முழுமையாக கிடைத்த பின்னர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Tags :
|
|