Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் சாதிய பாகுபாடின்றி தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் .. வெ.இறையன்பு

அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் சாதிய பாகுபாடின்றி தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் .. வெ.இறையன்பு

By: vaithegi Sat, 13 Aug 2022 07:26:02 AM

அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் சாதிய பாகுபாடின்றி  தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் ..    வெ.இறையன்பு

சென்னை: நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.இதை அடுத்து ஊள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் சாதி பாகுபாடு காரணமாக தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுதந்திர தின விழாவில் சென்னை தலைமை செயலகம் முதற்கொண்டு, கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசிய கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகளோ, தேசிய கொடியையும், அதை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

v. god,national flag ,வெ.இறையன்பு,தேசிய கொடி

இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவுக்கூறு 17-ன்படி "தீண்டாமை" ஒழிக்கப்பட்டு அதன் எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. "தீண்டாமை" காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதுபோன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எந்த வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இதை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், போதுமான காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்த புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண், ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையினை அரசுக்கு 14.8.2022 மாலைக்குள் வந்து சேருமாறும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும், அதுகுறித்த அறிக்கையை 17.8.2022-க்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Tags :
|