Advertisement

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

By: vaithegi Wed, 29 June 2022 5:05:32 PM

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

தமிழகம்: தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. மேலும், சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் அதிக அளவு மழை பொழிவு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் மீண்டும் மழை பெய்தது.

இன்று மட்டும் 30ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain,chennai ,மழை ,சென்னை

தற்போது நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நாளை 30 ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|