சென்னை மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. புதிய பேருந்து நிலையம் கீழம்பாக்கம்..
By: Monisha Sat, 25 June 2022 9:49:37 PM
சென்னை: சென்னையில் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கின்றனர். இதனால் கூட்ட நெரிச்சலைக் குறைக்க புதிய பேருந்து நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர்.அதன்படி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுமையை குறைக்கம் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டன.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் கீழம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கபடும் என்று அறிவித்து உள்ளனர். இந்த பேருந்து நிலையம் 88.52 ஏக்கரில் அமைகின்றது. அதில் 215 பேருந்து நிறுத்து மிடங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் கூடுதல் பேருந்துகளும் நிறுத்தி வைக்கும் வகையில் 3.95 ஏக்கர் பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பார்கிங் வசதி, கார்கள், இருசக்கர வாகனங்களை கூட அதில் நிறுத்த முடியும். இது அனைவர்க்கும் உதவும் வகையில் ஏற்பாடு செய்து வைத்து உள்ளனர்.
இதனை ஒட்டி மெட்ரோ ரயில் வசதி ஏற்படும் கிடைக்கும்.
அதனால் இப்பகுதியில் நிலத்தின் மதிப்பு கூடும் ஆதலால் கீழம்பாக்கம் பகுதி மிக பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.