Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக்கொண்டார்

துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக்கொண்டார்

By: vaithegi Thu, 11 Aug 2022 5:09:10 PM

துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக்கொண்டார்

புதுடெல்லி: நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் கடந்த 6-ந் தேதி நடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய அவர் 528 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை அவர்களை தோற்கடித்தார்.

இதனை அடுத்து புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டும் வருகின்றனர். இதற்கிடையில், வெங்கையா நாயுடுவின் துணை ஜனாதிபதி பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

vice president,jagadeep dhankar , துணை ஜனாதிபதி, ஜெகதீப் தங்கர்

இதனை தொடர்ந்து இந்த நிலையில் நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக்கொண்டார். ஜெகதீப் தன்கருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :