- வீடு›
- செய்திகள்›
- தமிழகம் ,புதுவையில் ஜன. 01ம் தேதி முதல் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தமிழகம் ,புதுவையில் ஜன. 01ம் தேதி முதல் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
By: vaithegi Wed, 28 Dec 2022 6:22:45 PM
சென்னை: வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.தமிழகத்தை தொடர்ந்து புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.
இதையடுத்து தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.அதை தொடர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதனால் தமிழகம் மற்றும் புதுவையில் ஜனவரி 01ம் தேதி முதல் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அத்துடன் சில பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.