- வீடு›
- செய்திகள்›
- பாஜகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிய ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்
பாஜகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிய ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்
By: Nagaraj Wed, 15 Feb 2023 9:50:58 PM
சென்னை: கட்சி பதவியை ராஜினாமா செய்தார்... ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்ற பிறகு பாஜக மூத்த தலைவராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன், பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய கயிறு வாரியத்தின் முன்னாள் தலைவருமான சிபி ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் மாநில ஆளுநராக சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்தார். பிப்ரவரி 18-ம் தேதி ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக அவர் பொறுப்பேற்கிறார், அவர் 2 முறை பாஜக மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.
கவர்னர் பதவிக்கு போட்டியிடுபவர் எந்த கட்சி பதவியையும் வகிக்கக் கூடாது என்பது விதி. எனவே பாஜகவில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சென்னை கமலாலயத்தில் உள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதையடுத்து அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக சென்னை கமலாலயத்திற்கு வந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவினர் மாலை அணிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .