- வீடு›
- செய்திகள்›
- ஜீலம் - நீலம் ஆற்றின் குறுக்கே சீனா அணைக்கட்டும் முயற்சிக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள்
ஜீலம் - நீலம் ஆற்றின் குறுக்கே சீனா அணைக்கட்டும் முயற்சிக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள்
By: Karunakaran Tue, 25 Aug 2020 3:45:08 PM
இந்திய பகுதியில் சிலவற்றை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனப்படுகிறது. இந்நிலையில் இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜீலம்- நீலம் ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த அணை கட்ட இதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில் நீலம் - ஜீலம் ஆற்றில் சீன நிறுவனங்களால் பெரிய அணைகள் கட்டப்படுவதை எதிர்த்து பாகிஸ்தானின் முசாபராபாத் நகரில் நேற்று இரவு பெரிய போராட்டங்களும் தீபந்த பேரணியும் நடைபெற்றது. தொடர்ந்து பலநாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
நேற்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இந்த பிரச்சினையை சர்வதேச அளவிற்கு எடுத்து செல்லும் வகையில் டுவிட்டரில் #SaveRiversSaveAJK என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.