Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜோ பைடன் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்!

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜோ பைடன் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்!

By: Monisha Thu, 29 Oct 2020 09:02:52 AM

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜோ பைடன் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்!

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி என்றாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில் உண்டு. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவே முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

usa,presidential election,joe biden,voting,willingdon ,அமெரிக்கா,அதிபர் தேர்தல்,ஜோ பைடன்,வாக்குப்பதிவு,விலிம்ங்டன்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் வில்மிங்டன் மாகாணத்தில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ஜில் பைடனும் தனது வாக்கை பதிவு செய்தார். தேர்தல் பிரசாரத்துக்காக விலிம்ங்டன் மாகாணத்துக்கு சென்ற ஜோ பைடன், அங்குள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

ஏற்கனவே அதிபர் டிரம்பும் தனது வாக்கை பதிவு செய்துவிட்டார். அதேபோல் தேர்தலையொட்டி இதுவரை கிட்டத்தட்ட 7.4 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர்.

Tags :
|
|