நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி கடிதம்
By: Nagaraj Tue, 15 Sept 2020 08:51:33 AM
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கடிதம்... நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ள கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் அனுப்பியுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், 'தேர்வு பயத்தில் ஒரேநாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக, ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் எதுவும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக வழக்கு விசாரணைகள் காணொலியில் நடக்கும் சூழலில்,
தேர்வு நடத்தப்படுவது குறித்தும் அவர் சில கருத்துகளை அதில்
தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த கருத்து, நீதிமன்றம் மற்றும்
நீதிபதிகளின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் மீது நீதிமன்ற
அவமதிப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற
தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்
அனுப்பியுள்ளார்.
அதில் ''நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும்
நம்பிக்கை, மதிப்பை குறைப்பதுபோல சூர்யாவின் இக்கருத்து உள்ளது. எனவே,
இந்திய நீதித் துறையின் மேன்மையை உறுதிப்படுத்தும் விதமாக சூர்யா மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அதில் கூறியுள்ளார்.