Advertisement

மதுரையில் ஜூலை 1 மின்தடை

By: vaithegi Thu, 30 June 2022 7:51:34 PM

மதுரையில் ஜூலை 1 மின்தடை

மதுரை: நாளை மதுரையில் அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் விநியோகிக்கப்படாது.

அதன்படி அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த துணை மின்நிலையத்தால் பயன்பெறும் பகுதிகளான, அவனியாபுரம் ஸ்டேட் வங்கி, மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, பாப்பாகுடி, வள்ளலானந்தபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலாநகர், ஏர்போர்ட் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

resistor,electricity ,மின்தடை ,மின்சாரம்

இதனை தொடர்ந்து எம்.எம்.சி.காலனி, சி.ஏ.எஸ்.நகர், சொக்கு நகர், ஜெயபாரத் சிட்டி 4 மற்றும் 5, பை-பாஸ்ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, போலீஸ் நிலைய பீடரில் பராமரிப்பு பணிகள் காரணமாக பெரியசாமிநகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜெ.பி. நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம்,

மேலும், காசி தோட்டம், பெரியரதவீதி, திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம். நகர், எஸ்.கே.ஆர்.நகர்,முல்லை நகர், ராஜீவ்காந்தி நகர், பாம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழக்கம் போல வழங்கப்படும் எனவும் மின்வாரிய பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Tags :