Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 12 மின்தடை

By: vaithegi Sat, 09 July 2022 11:50:06 AM

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 12 மின்தடை

திருநெல்வேலி : தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து ஜூலை 12ம் தேதி நெல்லை மாவட்டம் கிராமப்புற மின் கோட்டத்திற்கு உட்பட்ட மானூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் மானூர், மாவடி, தெற்குப்பட்டி, களக்குடி, எட்டான்குளம், கானார் பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகள் மற்றும் வள்ளியூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு, பணகுடி பகுதிக்கு உட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன் குளம் போன்ற பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

power outage,tirunelveli ,மின்தடை ,திருநெல்வேலி

மேலும் பக்கத்து கிராமங்கள், பணகுடி பகுதிக்கு உட்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தப்பனை, கடம்பன்குளம் ஆகிய பகுதிகள் மற்றும் தென்காசி மின் கோட்டத்துக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தென்காசி புதிய பஸ்நிலையம்

மேலும் மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :