Advertisement

காஞ்சிபுரத்தில் ஜூலை 16 வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 14 July 2022 7:25:08 PM

காஞ்சிபுரத்தில் ஜூலை 16 வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் : தமிழகத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி வேலைவாய்ப்பற்ற எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுர மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து நாளை மறுநாள் எஸ்.சி., எஸ்டி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளனர்.

employment camp,kanchipuram ,வேலைவாய்ப்பு முகாம்,காஞ்சிபுரம்

இம்முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. மேலும், 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள இருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் படித்த அனைவருமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் கலந்துகொள்வதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் பெற்ற இளைஞர்கள் அசல் கல்வி சான்றுகள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :