Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீதி வென்றுள்ளது... ராகுல் வழக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

நீதி வென்றுள்ளது... ராகுல் வழக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

By: Nagaraj Fri, 04 Aug 2023 8:34:43 PM

நீதி வென்றுள்ளது... ராகுல் வழக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தனர்.

case,justice,m k stalin,rahul gandhi,tweet ,ட்வீட், நீதி, மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, வழக்கு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், ராகுல்காந்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது. ராகுலை வயநாடு தொகுதி தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அவதூறு வழக்கில் அன்புச் சகோதரர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த முடிவு, நமது நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|