Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுத்தேர்வு மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

பொதுத்தேர்வு மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

By: Monisha Tue, 09 June 2020 09:53:40 AM

பொதுத்தேர்வு மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் அனைத்து துறைகளும் முடங்கியது. அதே போல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை வருகிற 11-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்து இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்த வேண்டுமா? என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

sslc general exam,schools opening,edappadi palanisamy,ka sengottaiyan ,எஸ்எஸ்எல்சி. பொதுத்தேர்வு,பள்ளிகள் திறப்பு,எடப்பாடி பழனிசாமி,கே ஏ செங்கோட்டையன்

இதற்கிடையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்றும் சந்தித்து பேச இருக்கிறார். பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட உள்ளது.

Tags :