வீரமரணம் அடைந்த தமிழக வீரருக்கு கமல்ஹாசன் இரங்கல்
By: Monisha Wed, 17 June 2020 1:23:28 PM
இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் உயிரிழந்த இந்திய வீரர்களுள் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் அவர்.
தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர் 22 வருடங்களாக நாட்டிற்காக ராணுவத்தில் பணிபுரிந்ததார். இந்நிலையில் லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார். இந்த செய்தி வெளிவந்ததும் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் பழனியின் குடும்பத்தினருக்கு சமூக வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் மற்றும் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பழனியின் மறைவு குறித்து கூறியதாவது:-
எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம். இவ்வாறு கூறியுள்ளார்.