கமல்ஹாசன் இன்று டெல்லி செல்கிறார்
By: vaithegi Fri, 23 Dec 2022 10:55:22 AM
சென்னை: காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அகில இந்திய அளவில் கட்சியை வளப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யவும் பாரத் ஜோடா யாத்ரா என்று இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
இதனை அடுத்து கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவாயில் இருந்து நடை பயணத்தை முதல்வர் மு.க .ஸ்டாலின் செப்டம்பர் 7ஆம் தேதி தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்நடைபயணம் கேரளா கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ,ராஜஸ்தான், உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்று அடைகிறது .
இதையடுத்து மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3, 500 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எனவே இதன் காரணமாக இன்று இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க இன்றிரவு டெல்லிக்கு கமல் ஹாசன் செல்கிறார். இதை தொடர்ந்து நாளை டெல்லியில் நடைபெறும் பயணத்தில் ராகுலுடன் கலந்து கொள்கிறார்.