நல்லவர்கள், கெட்டவர்கள் யார் என்று கமல்தான் சொல்ல வேண்டும்
By: Nagaraj Fri, 06 Nov 2020 8:54:25 PM
நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை கமல்ஹாசன் தான் சொல்ல வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவுரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளது. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து 3 நாட்களாக கட்சி உறுப்பினருடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது பேசிய கமல்ஹாசன், சட்டப்பேரவை தேர்தலில்
நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம். எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள்
இருக்கிறார்கள் என கூறியிருந்தார்.
மேலும், நல்லவர்களை தங்களுடன்
கூட்டணி அமைக்க அழைப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இது
குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, நல்லவர்கள்
யார்? கெட்டவர்கள் யார்? என்பதை கமல்ஹாசன் தான் சொல்ல வேண்டும் என
தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடியில் நவம்பர் 11ம் தேதி
நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் மு.க ஸ்டாலின் விரும்பினால் பங்கேற்கலாம்
என்றும் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை இடையேயான கருத்து முரண்பாடுகளை
அவர்கள் தான் விளக்க வேண்டும் என்றும் கூறினார்.