Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தல்

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தல்

By: Nagaraj Thu, 08 Dec 2022 6:14:57 PM

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தல்

காஞ்சிபுரம்: ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவின்போது கபீர் புரஸ்கார் விருது முதல்வரால் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது பற்றி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், காவல் தீயணைப்பு துறை, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் போன்றோர் நீங்கலாக சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசு பணியாளர்கள் செயலாற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக விளங்கும் பட்சத்தில் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆகின்றனர்.

ஒரு ஜாதி, இனம், பிறப்பு சார்ந்தவர்கள், மற்ற ஜாதி இன வகுப்பை சார்ந்தவர்களை வகுப்பு கலவரத்தின் போதோ, வன்முறையின் போதோ காப்பாற்றியதை வெளிப்படையாக கூறும்போது அவரது உடல் மற்றும் மன வலிமையை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.

youth welfare,kanchipuram,headquarters,collector,press release ,இளைஞர் நலன், காஞ்சிபுரம், தலைமையகம், கலெக்டர், செய்திக்குறிப்பு

இந்த விருதிற்காக விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான htpp:awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை பெற்று தலைமையகம் அனுப்பி விட வேண்டி உள்ளது.

எனவே வருகிற 12-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :