கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடம்
By: Monisha Fri, 28 Aug 2020 4:42:17 PM
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 03 ஆயிரத்து 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் பொதுமக்களை போன்று அரசியல் தலைவர்களான எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களும் உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கும் கடந்த சில தினங்கள் முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து தற்போது காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.