Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஜூலை 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் முன்பதிவு துவக்கம்

கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஜூலை 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் முன்பதிவு துவக்கம்

By: vaithegi Fri, 15 July 2022 12:03:50 PM

கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஜூலை 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் முன்பதிவு துவக்கம்

கன்னியாகுமாரி : கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக வேலைவாய்ப்பு முகாமினை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதனால் வசந்த் அன் கோ நிறுவனத்தின் சார்பில் நடைபெற இருக்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 30 ஆம் தேதி நாகா்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

employment camp,kanyakumari ,வேலைவாய்ப்பு முகாம்,கன்னியாகுமாரி

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதாவது, பத்தாம் வகுப்பு தோ்ச்சி, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, முதுநிலை, பொறியியல் , ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ என அனைவருமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் அதற்கான முன்பதிவில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். இதற்கான முன்பதிவு வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை நாகா்கோவில் கோா்ட் சாலை, ஆசாரிப்பள்ளம், மாா்த்தாண்டம், கருங்கல் மற்றும் பனச்சமூட்டில் உள்ள வசந்த் அன் கோ கிளைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்பதிவில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பயோடேட்டா, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களை கட்டாயமாக எடுத்து வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :