Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரியில் படகு போக்குவரத்திற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்திற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு

By: vaithegi Fri, 17 Mar 2023 09:59:17 AM

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்திற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு

கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு ... சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் குவிவது என்பது வழக்கமான ஒன்று.

மேலும், விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் கானப்படும். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சூரிய உதயத்தை காணவும், விவேகானந்தை நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்தும் மகிழ்வர்.

kanyakumari,fee ,கன்னியாகுமரி,கட்டணம்

இதனை அடுத்து இந்த நிலையில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம் அதிகரிக்கப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துவுள்ளது.

அதன் படி சாதாரண கட்டணம் ரூ.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.75ஆகவும், சிறப்பு கட்டணம் ரூ.200 ஆக இருந்த நிலையில், புதிய கட்டணமாக இன்று முதல் ரூ.300ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :