Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு சோனியாவுக்கு கடிதம் எழுதியது குறித்து கபில் சிபல் விளக்கம்

புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு சோனியாவுக்கு கடிதம் எழுதியது குறித்து கபில் சிபல் விளக்கம்

By: Karunakaran Wed, 26 Aug 2020 12:11:43 PM

புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு சோனியாவுக்கு கடிதம் எழுதியது குறித்து கபில் சிபல் விளக்கம்


காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக செயல்பட்டு வரும் சோனியா காந்திக்கு வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக அவரால் கட்சியை சுறுசுறுப்பாக வழிநடத்த முடியவில்லை என கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், கட்சிக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கட்சியின் காரிய கமிட்டி மற்றும் பல்வேறு அமைப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனால், காங்கிரசுக்குள் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த கடிதம் கிடைத்ததை தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா காந்தி விருப்பம் தெரிவித்தார். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

kapil sibal,letter,sonia,new leader ,கபில் சிபல், கடிதம், சோனியா, புதிய தலைவர்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் 23 தலைவர்களின் கடித விவகாரம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. காரிய கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய சோனியா, கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார். இந்நிலையில் சோனியாவுக்கு கடிதம் எழுதியதற்கான காரணம் குறித்து மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் நேற்று கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இது ஒரு பதவியை பற்றியது அல்ல. மாறாக எனது நாட்டை பற்றியது’ என்று சூசகமாக குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து மேலும் விரிவாக எதுவும் அவர் கூறவில்லை. நாட்டு நலனுக்காகவே காங்கிரசுக்கு புதிய தலைவர் தேவை என்ற நோக்கில் 23 தலைவர்களும் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

Tags :
|
|