Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மீன் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தை பிடிக்கும் - எடியூரப்பா

மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மீன் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தை பிடிக்கும் - எடியூரப்பா

By: Karunakaran Fri, 31 July 2020 1:26:17 PM

மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மீன் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தை பிடிக்கும் - எடியூரப்பா

பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரியின் கிருஷ்ணா இல்லத்தில் நேற்று மீன் வளர்ப்பாளர்கள் தின விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டார். அதன்பின், மீன்துறை தொடர்பான திட்டங்கள் அடங்கிய கையேட்டை எடியூரப்பா வெளியிட்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், மீனவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.291 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் கடலோர பகுதிகளின் மேம்பாட்டிற்காக ரூ.450 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறோம். விசை படகுகளுக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கு டீசல் மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

eduyurappa,karnataka,fish production,aquaculture scheme ,எடியூரப்பா, கர்நாடகா, மீன் உற்பத்தி, மீன்வளர்ப்பு திட்டம்

நாட்டின் மீன் உற்பத்தியில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது. மாநில அரசு அறிவித்துள்ள மீன் வளர்ப்பு திட்டத்தின் மூலம் மீன் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. மீனவர்களின் நலனுக்காகவே சிறப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்தி இருக்கிறோம் என்று எடியூரப்பா கூறினார்.

மேலும் அவர், நவீன முறையில் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படுகிறது. பிரதமர் அறிவித்துள்ள மீன்வள திட்டத்தின் கீழ் அதிக நிதியை பெற மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. கர்நாடகத்தில் நான் முதல்-மந்திரியான உடனேயே மீனவர்களின் ரூ.60 கோடி கடனை தள்ளுபடி செய்தேன் என்று தெரிவித்தார்.

Tags :