Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதன்முதலில் திருநங்கைகளுக்காக தனி நல வாரியம் அமைத்தவர் கருணாநிதி: எம்.பி., கனிமொழி பெருமிதம்

முதன்முதலில் திருநங்கைகளுக்காக தனி நல வாரியம் அமைத்தவர் கருணாநிதி: எம்.பி., கனிமொழி பெருமிதம்

By: Nagaraj Sat, 06 May 2023 8:41:50 PM

முதன்முதலில் திருநங்கைகளுக்காக தனி நல வாரியம் அமைத்தவர் கருணாநிதி: எம்.பி., கனிமொழி பெருமிதம்

திருச்சி: இந்தியாவிலேயே முதன்முதலில் திருநங்கைகளுக்காக தனி நல வாரியம் அமைத்தவர் கருணாநிதி என்று எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கோவண்டக்குறிச்சியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட எம்.பி கனிமொழி பேசுகையில், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், ஜாதி, மத பிரச்னைகள் என ஸ்திரமற்ற சூழலில் வாழ்ந்து வருகிறோம்.மனதளவில் யார் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.

எனவே, மனநலம் தொடர்பான கொள்கையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. கரோனா உள்ளிட்ட எந்த நோயிலிருந்தும் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வீடு திரும்புவதுதான் பிரச்சனை.

kanimozhi,minister,speech , கனிமொழி எம்.பி., பதில், புள்ளம்பாடி

மூன்றாம் பாலினத்தவர், திருநங்கைகள் என சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் உரிய அங்கீகாரம் அளித்து, அவர்களும் இந்த சமுதாயத்திற்கு பங்களிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.

இந்தியாவிலேயே முதன்முதலில் திருநங்கைகளுக்காக தனி நல வாரியம் அமைத்தவர் கருணாநிதி. அவர் வழியில் தற்போதைய தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், எஸ்.பி., சுஜித்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :