கடும் அமளி .. ராஜ்யசபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு
By: vaithegi Thu, 23 Mar 2023 3:35:47 PM
இந்தியா: கடும் அமளிக்கு மத்தியில் மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு ....
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணைக்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மற்றும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆளும் காட்சி உறுப்பினர்களின் கோரிக்கை காரணமாக, பெரும் அமளி ஏற்பட்டதால் லோக்சபா மற்றும் ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி ராகுல் காந்தி பேசியதற்கும், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் மக்களவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனை அடுத்து இதற்கு இடையில், சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் 92-வது தியாக தினமான இன்று ராஜ்யசபாவில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.