- வீடு›
- செய்திகள்›
- கேரளாவில் இன்று மேலும் 1103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் இன்று மேலும் 1103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
By: Karunakaran Sat, 25 July 2020 9:02:46 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது கேரளாவில் இன்று ஒரேநாளில் 1,103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 18,098 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 3 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு 9,420 பேர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,613 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,013 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,53,982 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.