கேரளா கவர்னர் ஆரிப்கான் அதிரடி உத்தரவுக்கு மா.கம்யூ தலைவர் கடும் கண்டனம்
By: Nagaraj Wed, 26 Oct 2022 08:58:09 AM
திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப்கான் பிறப்பித்த உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பல்கலைக்கழக வேந்தர் மகாதேவன் பிள்ளையால் நியமிக்கப்பட்ட 15 செனட் உறுப்பினர்களை நீக்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், ஆளுநரின் இறுதி எச்சரிக்கையை துணைவேந்தர் நிராகரித்து விட்டார்.
இதைத் தொடர்ந்து, ராஜ்பவன் அசாதாரண நடவடிக்கையாக 15 உறுப்பினர்களை செனட்டில் இருந்து நீக்கி உத்தரவிட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த உத்தரவின் நகல்கள் துணைவேந்தர் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. செனட் கூட்டத்தை நடத்தவும், துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவுக்கு செனட்டின் வேட்பாளரை வழங்கவும் ஆளுநர் பலமுறை உத்தரவிட்டும் கவனிக்கப்படாமல் போனதை அடுத்து, ஆளுநர் இந்த அசாதாரண நடவடிக்கையை எடுத்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரள பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம்
அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. முன்னதாக, செனட் உறுப்பினர்களை
நீக்கியதில் சில குளறுபடிகள் இருப்பதாகவும், செனட் நீக்க முடிவை
மறுபரிசீலனை செய்யுமாறும் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வி.மகாதேவன் பிள்ளை
பல்கலைக்கழக வேந்தரிடம் தெரிவித்தார்.
உறுப்பினர்கள்.
கவர்னர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில், கேரள
பல்கலைக்கழகத்தின் செனட்டில் இருந்து 15 உறுப்பினர்களை நீக்கினார்.
வேந்தரால் பரிந்துரைக்கப்பட்ட 15 உறுப்பினர்கள் செனட் உறுப்பினர்களாக
நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்று கேரளப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு
ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். 15 பேரில் ஐந்து பேர் சிண்டிகேட்
உறுப்பினர்கள்.
இதற்கு கேரள முதல்வர்
பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கேரள கவர்னர்
ஆரிப்கான் பிறப்பித்த உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தலைவர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்து கூறியதாவது:- அப்படி
உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இது தன்னிச்சையானது,
சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. கேரளாவின் உயர்கல்வி முறையைக்
கட்டுப்படுத்தி அழிக்க நினைக்கிறார்கள். அங்கு ஆர்எஸ்எஸ்காரர்களை
நியமித்து உயர்கல்வி முறையைக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்.
இதனால்
கல்வி நிறுவனங்களில் இந்துத்துவா சித்தாந்தத்தை பரப்ப முடியும்.
அப்படிப்பட்ட உத்தரவை ஆளுநர் பிறப்பிக்க அரசமைப்புச் சட்டம்
அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய
உள்ளோம். அவர் கூறியது இதுதான்.