Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேரலை விவாதத்தின் போது கமலை கோபப்படுத்திய கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

நேரலை விவாதத்தின் போது கமலை கோபப்படுத்திய கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

By: Nagaraj Tue, 02 June 2020 6:59:48 PM

நேரலை விவாதத்தின் போது கமலை கோபப்படுத்திய கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

நேரலையின் விவாதத்தின் போது கமலை கோபப்படுத்தி உள்ளார் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா.

கொரோனா வைரஸ் குறித்த விவாதம் ஒன்று நேற்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர்

இந்த உரையாடலின்போது கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரள சுகாதாரத்துறைக்கு தான் பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்தார், இந்த பாராட்டுக்களை ஏற்றுக்கொண்ட கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, தமிழகத்திலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறை சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

kamalahasan,a few minutes,angry,excited,live ,கமலஹாசன், சில நிமிடங்கள், கோபம், பரபரப்பு, நேரலை

அதுவரை தமிழக அரசின் நடவடிக்கையை குற்றம் கூறிக்கொண்டிருந்த கமலஹாசன் கேரளா அமைச்சரின் இந்த கருத்தால் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதை கண்டுகொள்ளாத கேரள அமைச்சர் தொடர்ந்து தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் சிறப்பான நடவடிக்கையை
எடுத்து வருவதாக திரும்பவும் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தால் கமலஹாசன் கோபமடைந்துள்ளார். இதனால் நிகழ்ச்சியின் இடையே சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது.

Tags :
|