Advertisement

காலிஸ்தான் பயங்கரவாதி டில்லி விமான நிலையத்தில் கைது

By: Nagaraj Thu, 24 Dec 2020 12:25:50 PM

காலிஸ்தான் பயங்கரவாதி டில்லி விமான நிலையத்தில் கைது

பயங்கரவாதி கைது... தீவிரவாதத்தை துாண்ட சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதி நேற்று டில்லி விமான நிலையத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

காலிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையை நிறைவேற்ற காலிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் சதித் திட்டங்கள் தீட்டி வந்ததை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கண்டறிந்தனர்.

மத்திய தரைக்கடலில் உள்ள தீவு நாடான சைப்ரசில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதியான குர்ஜீத் சிங் நிஜ்ஜர் என்பவர் ஹர்பால் மற்றும் மொயின் கான் என்பவர்களுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

mumbai,nia officials,nijjar,terrorist,arrested ,மும்பை, என்ஐஏ அதிகாரிகள், நிஜ்ஜர், பயங்கரவாதி, கைது

சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் இவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்கள் புகைக்கப்படங்கள் மற்றும் 'வீடியோ'க்களை பதிவிட்டு வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிஜ்ஜர் ஹர்பால் மொயின் மற்றும் சுந்தர் லால் பாராஷார் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து சைப்ரசில் உள்ள நிஜ்ஜரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 'நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று சைப்ரசில் இருந்து நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிஜ்ஜர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.

அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரை மும்பைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Tags :
|
|