Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக எழுந்த புகாரையடுத்து மன்னிப்பு கோரிய குஷ்பு

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக எழுந்த புகாரையடுத்து மன்னிப்பு கோரிய குஷ்பு

By: Karunakaran Thu, 15 Oct 2020 2:18:33 PM

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக எழுந்த புகாரையடுத்து மன்னிப்பு கோரிய குஷ்பு

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், மனநலம் குன்றிய ஒரு கட்சியில் இருந்து விலகி விட்டேன் என குறிப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளை குஷ்பு இழிவுபடுத்தியதாக, ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான தேசிய தளம்’ என்ற தொண்டு நிறுவனம் அவருக்கு கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து குஷ்பு மீது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுமார் 30 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் குஷ்புவுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

khushboo,apologizes,insult,disabled people ,குஷ்பூ, மன்னிப்பு, அவமதிப்பு, ஊனமுற்றோர்

தற்போது தனது கருத்துக்காக குஷ்பு மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவசரம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடினேன். மனச்சோர்வு, இருமுனை கோளாறு போன்றவற்றுடன் வாழும் நண்பர்களைக்கொண்டுள்ளேன் என்று கூறினார்.

மேலும் அவர், மக்களின் பன்முகத்தன்மையை உணர்ந்தவள் மட்டுமின்றி அதில் இருந்து பெருமளவில் பெற்றும் உள்ளேன் என தெரிவித்துள்ளார். இருப்பினும், குஷ்பு சட்டத்தை மீறியிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் சாக்குப்போக்கு எதுவும் கூற வேண்டாம் என தொண்டு நிறுவனத்தின் பொதுச்செயலாளர் முரளிதரன் கூறியுள்ளார்.


Tags :
|