Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; விபத்துக்கு பின் குஷ்பு டுவிட்

வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; விபத்துக்கு பின் குஷ்பு டுவிட்

By: Monisha Wed, 18 Nov 2020 3:24:04 PM

வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; விபத்துக்கு பின் குஷ்பு டுவிட்

நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு சென்னையில் இருந்து இன்று காலை கடலூரில் நடைபெற உள்ள வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு அருகே அவரது கார் திடீரென ஏற்பட்ட விபத்துக்குள்ளானதை அடுத்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இருப்பினும் தான் நலமாக இருப்பதாகவும் தனது வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் வேறொரு காரில் தற்போதுதான் கடலூருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் டுவிட்டரில் குஷ்பு பதிவு செய்துள்ளார்.

bjp,khushbu,accident,vel yaatrai,dwight ,பாஜக,குஷ்பு,விபத்து,வேல் யாத்திரை,டுவிட்

மேலும் தன்னுடைய கார் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருந்ததாகவும் திடீரென கண்டெய்னர் எப்படி எங்கள் காரில் வந்து மோதியது என்று தெரியவில்லை என்றும் இதுகுறித்து கண்டெய்னர் டிரைவரிடம் போலீஸார் விசாரணை செய்து வருவதாகவும் அவர் மற்றொரு டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன் என்றும் குஷ்பு அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|