Advertisement

ஈரோட்டில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை தொடக்கம்

By: Nagaraj Wed, 07 Sept 2022 08:18:55 AM

ஈரோட்டில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை தொடக்கம்

ஈரோடு: கொலு பொம்மைகள் கண்காட்சி... ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது.

சரஸ்வதி பூஜை அக்டோபா் 4 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு காஞ்சிபுரம், கொல்கத்தா உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

exhibition,sale,kill toys,discount,statues ,கண்காட்சி, விற்பனை, கொலு பொம்மைகள், தள்ளுபடி, சிலைகள்

இதில் சரஸ்வதி சிலைகள், ராமா் செட், பெண் பாா்த்தல், நிச்சயதாா்த்தம், திருமண செட், கிரகபிரவேசம், ராஜேஸ்வரி, தசாவதாரம், அன்னபூரணி, விவசாயிகள், மகாலட்சுமி, சப்தகன்னிகள், ஆழ்வாா்கள் போன்ற கொலு பொம்மைகள் செட் மற்றும் அத்திவரதா், பிரமாண்ட நடராஜா், கோமாதா உள்ளிட்ட பல்வேறு பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ரூ.10 முதல் ரூ.17,000 வரை மதிப்பிலான பொம்மைகள் விற்பனைக்குள்ளன. குறிப்பிட்ட பொம்மை ரகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. இக்கண்காட்சி மற்றும் விற்பனையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Tags :
|