கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியானது
By: Nagaraj Sun, 19 July 2020 11:06:55 AM
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் காரணமாக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பொது முடக்கக் காலத்தில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி வந்த
இவருக்கு, ஏற்கெனவே தொற்று உறுதியானவர் மூலமாகவே பரவியிருக்கலாம் என
சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, செங்குட்டுவன் ஓசூரில்
உள்ள தனியார் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில்
ஏற்கெனவே 13 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட
நிலையில் செங்குட்டுவனையும் சேர்த்து 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொற்றால் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.