Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவும் அபாயத்தால் புதுச்சேரியில் குபேர அங்காடிக்கு 2 நாட்கள் சீல்

கொரோனா பரவும் அபாயத்தால் புதுச்சேரியில் குபேர அங்காடிக்கு 2 நாட்கள் சீல்

By: Nagaraj Wed, 15 July 2020 11:03:35 PM

கொரோனா பரவும் அபாயத்தால் புதுச்சேரியில் குபேர அங்காடிக்கு 2 நாட்கள் சீல்

குபேர் அங்காடிக்கு சீல்... கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குபேர் அங்காடியை 48 மணி நேரத்திற்கு மூடி வருவாய் துறையினர் சீல் வைத்தனர்

புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ளது குபேர் அங்காடி (பெரிய மார்க்கெட்) இந்த அங்காடியில் பூ, காய்கறி, பழம் மளிகை உள்ளிட்ட கடைகள் மக்களின் பயன்பாடுக்காக இயங்கி வருகின்றது இந்த அங்காடியில் எப்போதுமே கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும்.

puducherry,kuber store,seal,48 hours,revenue department ,புதுச்சேரி, குபேர் அங்காடி, சீல், 48 மணி நேரம், வருவாய் துறை

இதனால் கொரோனா தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டது இதனை தடுக்கும் விதமாக புதுச்சேரி அரசு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு இயங்கி வந்த காய்கறி கடைகளை தற்காலிகமாக புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தற்போது குபேர் அங்காடியில் பூ , பழக்கடைகள் மற்றும் மளிகை கடைகள் மட்டும் இயங்கி வருகின்ற நிலையில் கடந்த சில நாட்களாக அங்காடியில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. மேலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத காரணத்தினால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதால் குபேர் அங்காடியின் 13 வாசல்களையும் பூட்டி சீல் வைத்து அடுத்த 48 மணி நேரம் கழித்து தான் திறக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
|