Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாயில் மேலாளரை கொலை செய்த கிர்கிஸ்தான் தொழிலாளி கைது

துபாயில் மேலாளரை கொலை செய்த கிர்கிஸ்தான் தொழிலாளி கைது

By: Karunakaran Sun, 06 Sept 2020 6:14:39 PM

துபாயில் மேலாளரை கொலை செய்த கிர்கிஸ்தான் தொழிலாளி கைது

துபாயில் அல் குவாஸ் என்ற தொழில்துறை பகுதி உள்ளது. இங்கு கேரேஜில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த 21 வயது வாலிபர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்த வாலிபர் தனது தாய் நாட்டிற்கு செல்வதற்காக தனக்கு விடுப்பு வழங்க வேண்டும் என கம்பெனி மேலாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் விடுப்பு வழங்காமல் வாலிபரை திட்டி அனுப்பி உள்ளார்.

இதனால் அந்த வாலிபர் கடும் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் அந்த தொழிலாளி, மற்ற ஊழியர்கள் வெளியே சென்ற சமயத்தில் தனியாக இருந்த மேலாளரை கத்தியால் கழுத்தை அறுத்தும் சுத்தியலால் தாக்கியும் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து நாடு திரும்ப முயற்சித்துள்ளார்.

kyrgyz worker,arrest,manager,dubai ,கிர்கிஸ் தொழிலாளி, கைது, மேலாளர், துபாய்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் இல்லாததால் அந்த வாலிபரால் தனது நாட்டிற்கு செல்ல முடியவில்லை. மேலும், போலீசார் தேடியதால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. மறுநாள் தனது நாட்டின் தூதரகத்திற்கு சென்று, நாடு திரும்ப உதவி செய்யும்படி கூறியுள்ளார். ஆனால் எந்த விவரத்தையும் கூறாததால் அவருக்கான அனுமதியை தூதரகம் நிறுத்தி வைத்தது. பின்னர், அங்கிருந்து வெளியே வந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தற்போது அவர் மீது துபாய் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, திட்டமிட்டு மேலாளரை கொலை செய்ததாக தொழிலாளி மீது அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதன்படி, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Tags :
|