கடும் மழை காரணமாக 2 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
By: Nagaraj Mon, 19 Dec 2022 10:04:06 PM
கொழும்பு: 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியுடன் சந்திப்பு: ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், தனது சேவையை
முடித்துக்கொண்டு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
ஹனா சிங்கருடன் சிநேகபூர்வமாக
உரையாடிய ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி
தெரிவித்ததுடன், அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்தும் தெரிவித்தார்.
2018 செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளராக ஹனா சிங்கர் செயற்பட்டார்.