Advertisement

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு

By: vaithegi Tue, 08 Nov 2022 9:35:02 PM

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு

சென்னை: 104 பேருக்கு கொரோனா உறுதி ... தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 26 பேர் உள்பட 26 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

corona,chennai ,கொரோனா ,சென்னை

இதையடுத்து இதில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10-க்கும் மேல் பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 227 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

மேலும் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 908 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 169 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|