Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த முறை அப்பா விட்டுக் கொடுத்தார்... இப்போ மகன் விட்டு கொடுத்துள்ளார்

கடந்த முறை அப்பா விட்டுக் கொடுத்தார்... இப்போ மகன் விட்டு கொடுத்துள்ளார்

By: Nagaraj Mon, 03 Apr 2023 7:29:27 PM

கடந்த முறை அப்பா விட்டுக் கொடுத்தார்... இப்போ மகன் விட்டு கொடுத்துள்ளார்

கர்நாடகா: சித்தராமையா தனது மகனுக்காக கடந்த முறை வருணா தொகுதியை விட்டுக்கொடுத்தார். இப்போது தந்தைக்காக வருணா தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளார் யதீந்திரா.

கர்நாடகாவில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது. பாஜக இன்னும் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஆனால், பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக இந்தத் தேர்தலை சந்திக்கிறது. ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முதல்வர் வேட்பாளராக குமாரசாமி களத்தில் உள்ளார். ஆனால் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

எனினும், காங்கிரஸ் வெற்றி பெற்றால், சித்தராமையா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு வருணா தொகுதியை சித்தராமையா தேர்வு செய்துள்ளார்.

chief minister,comment,father,joy,mla,yathindra, ,எம்.எல்.ஏ, கருத்து, தந்தை, மகிழ்ச்சி, முதல்-மந்திரி, யதீந்திரா

அவரது மகன் யதீந்திரா அந்த தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். சித்தராமையா தனது மகனுக்காக கடந்த முறை வருணா தொகுதியை விட்டுக்கொடுத்தார். இப்போது தந்தைக்காக வருணா தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார் யதீந்திரா.

மண்டியாவில் யதீந்திரா கூறியதாவது:- இந்த சட்டசபை தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. எனது தந்தை வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். இது எனது விருப்பம் மட்டுமல்ல, அரசியல் கட்சித் தலைமையின் விருப்பமும் கூட. காங்கிரஸின் இரும்புக் கோட்டை வருணா. விஜயேந்திரர் உட்பட யார் நின்றாலும் என் தந்தையை தோற்கடிக்க முடியாது. நிச்சயம் வெற்றி பெறுவார். ஏனெனில் வருணா தொகுதியில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளோம்.

நான் போட்டியிடாவிட்டாலும் என் தந்தை வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். நான் மட்டுமல்ல எந்த மகனும் தன் தந்தை முதல்-மந்திரியானால் மகிழ்ச்சியாக இருப்பான். கடந்த ஜனவரி மாதம் முதல் அவருக்காக பிரச்சாரம் செய்து வருகிறேன். தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன். கண்டிப்பாக அவரை வெற்றி பெறச் செய்வேன். ஒரு மகனாக இது என் கடமை என கூறினார்.

Tags :
|
|
|