சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்
By: vaithegi Thu, 01 Dec 2022 10:04:05 AM
சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசுகிறார். ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்காக தமிழக அரசு கொண்டு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டது. இதனை அடுத்து இது தொடர்பாக முடிவு எடுக்க அமைச்சர் ரகுபதி இன்று ஆளுநரை சந்திக்கிறார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் தராமல் உள்ளார்.
இதனால் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் சில தினங்களுக்கு முன்பு காலாவதி ஆகிவிட்டது. ஆளுநரிடம் இது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆளுநரை சந்திக்கிறார்.
இதற்காக இன்று காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்கிறது . ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவாரா ஆளுநர் என்ற பரபரப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.