Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மோதலில் துப்பாக்கிச்சூடு

டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மோதலில் துப்பாக்கிச்சூடு

By: Nagaraj Wed, 05 July 2023 9:38:26 PM

டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மோதலில் துப்பாக்கிச்சூடு

புதுடில்லி: துப்பாக்கிச்சூடு... டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

டெல்லியின் திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் இன்று பிற்பகலில் இருவேறு வழக்கறிஞர்கள் குழுவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு வழக்கறிஞர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

gun license,investigated,courthouse,trial ,துப்பாக்கி உரிமம், விசாரிக்கப்படும், நீதிமன்ற வளாகம், விசாரணை

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த டெல்லி பார் கவுன்சில் தலைவர் கே.கே.மனன், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

துப்பாக்கிக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா என விசாரிக்கப்படும் என்றும் கூறிய கே.கே.மனன், உரிமம் பெற்றிருந்தாலும் நீதிமன்ற வளாகத்தினுள் யாரும் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்பதை சுட்டிக் காட்டினார்.

Tags :