Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொய்யான குற்றச்சாட்டு கூறிய விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; ராஜித சேனாரத்ன தகவல்

பொய்யான குற்றச்சாட்டு கூறிய விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; ராஜித சேனாரத்ன தகவல்

By: Nagaraj Fri, 03 July 2020 8:06:40 PM

பொய்யான குற்றச்சாட்டு கூறிய விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; ராஜித சேனாரத்ன தகவல்

சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்... அவன்காட் விவகாரத்தில் தன்மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைத்துள்ள பொதுஜன பெரமுன வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அவன்காட் நிறுவனத்தினர், 3 வருடங்களுக்கு முன்பு 5 மில்லியன் கொடுத்ததாக கூறினார்கள். நேற்று இரவு முதல் 2 கோடியாக அந்த தொகை மாற்றம் அடைந்து காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக விஜயதாச ராஜபக்ஷ மற்றும் அவன்காட் நிறுவதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளேன்.

avangot,affair,legal action,fraud,activities ,அவன்காட், விவகாரம், சட்ட நடவடிக்கை, மோசடி, செயற்பாடுகள்

அதாவது யாருக்கு வேண்டுமென்றாலும் முடியும் தங்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு காசோலை புத்தகத்தை கொண்டுவந்து, அதில் தொகையொன்றை எழுதி வழங்க முடியும். அதனை பெற்றுக்கொண்டவர் ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் அவன்காட் நிறுவனத்தின் உரிமையாளர் 50 கோடி ரூபாய் தங்களுக்காக செலவிட்டதாக கூறியுள்ளார்.

அவ்வாறாயின் நேற்று இரவு மிகுதி 50 கோடி ரூபாயை விஜயதாச ராஜபக்ஷ பெற்றிருப்பாராக இருக்கும். இப்போது என்ன சொல்கிறார். அவருக்கு இவ்வளவு கொடுத்தேன், இவருக்கு இவ்வளவு கொடுத்தேன், என்கிறார். குறித்த நிறுவனம் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. மோசடி செயற்பாடுகளில்தான் இதுவரை காலமும் ஈடுபட்டு வந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|